Published : 19 Nov 2016 09:28 AM
Last Updated : 19 Nov 2016 09:28 AM
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட காரணத்தால் சிறிய வியாபாரிகள் மற்றும் விவசாயி களுக்கு கடன் வழங்கிய வங்கி அல்லாத நிறுவனங்கள் கடனை வசூலிப்பதில் சிரமம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய வியாபாரிகள் மற்றும் விவ சாயிகள் பணமாக கடனை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால் கடனை வசூலிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
இதுகுறித்து மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் அய்யர் கூறியதாவது:
பொதுவாக தினக்கூலிகள்தான் எங்கள் நிறுவனத்தின் வாடிக்கை யாளர்களாக உள்ளனர். விவசாயி கள் முதல் சிறிய வணிகர்கள் வரை தினந்தோறும் வேலைக்குச் சென்றால்தான் கடன்தொகையை செலுத்த முடியும். தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சமீபத்திய நாட்களில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் தற் போதைய சூழ்நிலையில் கடனை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் பணத்தை செலுத்தமாட்டார் கள் என்று நாங்கள் நினைக்க வில்லை. ஆனால் தாமதம் ஏற்பட லாம். இந்த பிரச்சினையை சரி செய்வதற்காக நாங்கள் வாடிக்கை யாளர்களுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம் என்று ரமேஷ் அய்யர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT