Published : 25 Oct 2016 10:37 AM
Last Updated : 25 Oct 2016 10:37 AM
வங்கிகளில் ரூ.500 கோடிக்கும் மேல் கடன் வாங்கி அதனை செலுத்தாத தனி நபர்களின் பெயர்கள் அல்லது நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுவது குறித்த விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.
ரூ. 500 கோடிக்கும் மேல் கடன் வாங்கி அதனை செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிடக் கோரி பிரசாந்த பூஷண் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகுர், நீதிபதி டி.ஒய். சந்திர சூட், நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு வெளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. கடந்த ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் பட்டியலை சமர்பித்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வருகிறது. அதனால் ரூ.500 கோடி அல்லது அதற்கு மேல் கடன் வாங்கியவர்கள் பெயர்களை கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று பொது நல வழக்குகள் தொடர்பான தன்னார்வ மையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நீதிபதிகள் முன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT