Last Updated : 23 Oct, 2016 12:43 PM

 

Published : 23 Oct 2016 12:43 PM
Last Updated : 23 Oct 2016 12:43 PM

ஜியோவுக்கு இணைப்பு வழங்காததால் வோடபோன், ஏர்டெல், ஐடியாவுக்கு ரூ.3,050 கோடி அபராதம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் திற்கு முறையாக இணைப்பு வழங்காத காரணம் மற்றும் ஒப்பந்த விதிகளை மீறியதற்காக வோடபோன், ஏர்டெல், ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம் விதிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்துள்ளது.

ஒரு தொலைத்தொடர்பு வட்டத்திற்கு ரூ.50 கோடி வீதம் ஏர்டெல் மற்று வோடபோன் நிறுவனத்திற்கு முறையே ரூ.1,050 கோடி (மொத்தம் 21 தொலைத்தொடர்பு வட்டங்கள்) அபராதமும் ஐடியா செல்லுலார் நிறுவனத்திற்கு ரூ.950 கோடி (மொத்தம் 19 தொலைத்தொடர்பு வட்டங்கள்) அபராதமும் டிராய் பரிந்துரை செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச அழைப்பு சேவை மற்றும் இணையதள சேவையுடன் 4ஜி சேவையை இந்தியாவில் தொடங் கியுள்ளது. ஆனால் ஜியோ நெட் வொர்க்கின் பெரும்பாலான அழைப்புகள் துண்டிக்கப்படுவ தாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டியது. இதையடுத்து டிராய் இந்த மூன்று நிறுவனங் களுக்கும் விளக்கம் கோரும் நோட்டீசை அனுப்பியது.

மேலும் மூன்று நிறுவனங் களுக்கு ரூ. 3,050 கோடி அபராதம் விதிக்குமாறு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத் துக்கு டிராய் பரிந்துரை செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x