Published : 24 Oct 2016 12:53 PM
Last Updated : 24 Oct 2016 12:53 PM

பயணிகள் வாகன பிரிவில் 3-ம் இடத்தை பிடிக்க டாடா மோட்டார்ஸ் திட்டம்

பயணிகள் வாகன விற்பனையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் 2020-ம் ஆண்டில் மூன்றாம் இடத்தைப் பிடிக்க திட்டமிடுவதாக கூறியிருக்கிறது. முதல் இடத்தில் மாருதி சுசூகியும், இரண்டாம் இடத்தில் ஹூண்டாய் நிறுவனமும் தற்போது இருக்கிறது.

இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவுத் தலைவர் மாயேங் பரேக் கூறியதாவது: அடுத்த ஐந்தாண்டு களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டிருக்கிறோம். அனைத்து விதமான வாகனங்களும் டாடா மோட்டார்ஸில் இல்லை. அதனால் அனைத்து பிரிவுகளில் புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும்.

உதாரணத்துக்கு பிரீமியம் ஹாட்ச்பேக் பிரிவில் எங்களிடம் கார்கள் இல்லை. அதேபோல சிறிய ரக எஸ்யூவி ரக கார்கள், எக்ஸி கியூட்டிவ் செடேன் ரக கார்கள் இல்லை. அடுத்த ஜனவரி ஹெக்ஸா என்னும் எஸ்யூவி ரக கார் அறிமுகப்படுத்த திட்டமிட் டிருக்கிறோம். பயணிகள் மற்றும் வர்த்தக் வாகனங்களுக்காக ரூ.3,500 கோடி முதல் ரூ.4,000 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019-20-ம் ஆண்டுக்குள் பயணிகள் வாகன பிரிவில் மூன்றாம் இடத்துக்கு வர திட்டமிட்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x