Published : 10 May 2022 09:56 PM
Last Updated : 10 May 2022 09:56 PM
தங்கம்... இந்த வார்த்தையே கொஞ்சம் உயர்வானதுதான் என்றால் அது மிகையில்லை. ஒரு நாட்டின் பணமதிப்பிலும் தங்கம் பங்கு வகிக்கிறது. அந்தளவுக்கு தங்கம் ஒரு சிறப்பான பொருளாக பார்க்கப்படுகிறது. ராஜாங்க விவகாரத்தில் மட்டும் இல்லாமல், மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் தங்கம் பெரும் பங்கு வகிக்கிறது. விலை நிரந்தரமில்லாத தங்ககத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பில்லை என நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்தினாலும், இந்திய சமூகத்தில் தங்கத்தின் மீதான வாஞ்சை குறையவே இல்லை. அட்சய திருதியை காலத்தில் அதிகரித்து வரும் தங்கத்தின் விற்பனையே இதற்கு சாட்சி.
மத்திய, கீழ்மத்திய வர்க்க குடும்பங்களின் எதிர்பாராத திடீர் செலவுகளை சமாளிக்க அவர்களிடம் இருக்கும் தங்கம்தான் ஆபத்துதவியாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை. அதற்கு சாட்சி தொலைக்காட்சி, பத்திரிகைகளில் நகைகளை அடமானம் வைப்பதற்கும், விற்பனைக்கு செய்யப்படும் விளம்பரங்கள். தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக்கடன் போல வங்கிகளும் நகைக்கடன் வழங்குகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT