Last Updated : 16 Mar, 2016 09:46 AM

 

Published : 16 Mar 2016 09:46 AM
Last Updated : 16 Mar 2016 09:46 AM

3 மாதங்களுக்கு ஒரு முறை வட்டி: ஆர்பிஐ அறிவிப்பு

சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்குமாறு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. குறுகிய கால இடைவெளி அல்லது காலாண்டுக்கு ஒரு முறை வட்டியை கொடுப்பதன் மூலம், கோடிக்கணக்கான சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று ஆர்பிஐ கூறியுள்ளது.

தற்போது சேமிப்பு கணக்கிற் கான வட்டி அரையாண்டுக்கு ஒரு முறை வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான வட்டி விகிதம் ஏப்ரல் 1, 2010-ம் ஆண்டிலிருந்து தினசரி கணக்கிடப்படுகிறது.

உள்நாட்டு சேமிப்பு கணக்குதாரர்களுக்கு வட்டியை குறுகிய காலம் அல்லது மூன்று காலாண்டுக்கு ஒருமுறை அளிக்க வேண்டும் என மார்ச் 3ம் தேதி ஆர்பிஐ வங்கிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் சேமிப்பு கணக்குகளுக்கு 4 சதவீத வட்டியை வழங்குகின்றன. சில தனியார் வங்கிகள் 6 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.

இந்த குறுகிய கால வட்டி அறிவிப்பு மூலம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பலன் கிடைக்கும். குறுகிய கால வட்டி அளிக்கும் இந்த திட்டத் தின்படி வட்டி அளிக்க வங்கி களுக்கு ரூ.500 கோடி வரை கூடுதல் சுமையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x