Published : 17 Mar 2016 09:30 AM
Last Updated : 17 Mar 2016 09:30 AM

மேக் இன் இந்தியா: அந்நிய நேரடி முதலீடு 29% உயர்வு

மேக் இன் இந்தியா திட்டத்தால் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு 29 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த டிசம்பருடன் முடிவடைந்த 15 மாத காலத்தில் இந்த முதலீடுகள் உயர்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துபூர்வமான பதிலில் கூறினார்.

மேக் இன் இந்தியா திட்டம் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. 2014-ம் அக்டோபர் முதல் 2015 டிசம்பர் வரையிலான காலத்தில் 29% சதவீதம் உயர்ந்துள்ளது. மேக் இன் இந்தியா தொடங்கப்படுவதற்கு முன்பாக உள்ள 15 மாத காலத்துடன் ஒப்பிடும் போது, மேக் இன் இந்தியா தொடங்கப்பட்ட 15 மாத காலத்தில் இந்த உயர்வு இருந்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 424 அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி கோரப்பட்டன. இதில் 285 திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

----------------------------------------

ஸ்நாப்டீலில் டிவிஎஸ் மோட்டார்ஸ்

இ-காமர்ஸ் துறை வளர்ந்து வரும் சூழலில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களை இனி ஸ்நாப்டீலில் வாங்க முடியும். டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 9 மாடல்களை ஸ்நாப்டீல் மோட்டார் பிரிவில் வாடிக்கை யாளர்கள் பார்க்க முடியும். மாடல், கலர், விநியோகஸ்தர்களை வாடிக்கையாளர் தேர்வு செய்ய முடியும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்நாப்டீல் நிறுவனம் மோட்டார் வாகனங்களுக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்நாப்டீல் மோட்டார் என்னும் புதிய பிரிவினை அறிமுகப்படுத்தியது.

----------------------------------------

வைஃபை ஏசி: ஒனிடா அறிமுகம்

மின்னணு பொருள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஒனிடா நிறுவனம் வைஃபை மூலம் இயங்கும் ஏசி-யை இந்த கோடைக்கால சீசனுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. ரெகாலியோ ஸ்மார்ட் வைஃபை ஏசி என்ற பெயரில் இது விற்பனைக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு ரெகுலர் ஸ்பிளிட் ஏசி-க்களில் இத்தகைய தொழில்நுட்பத்தை ஒனிடா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதற்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த கோடைக் காலத்துக்கென இன்வெர்டர் தொழில் நுட்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் குலு மிர்சந்தானி தெரிவித்துள்ளார். இந்த ஏசி-யை வைஃபை தொழில்நுட்பத்தின் மூலம் உலகின் எப்பகுதியிலிருந்தும் இயக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x