Published : 24 Feb 2016 09:34 AM
Last Updated : 24 Feb 2016 09:34 AM

ரூ.599 க்கு விமான பயணம்: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் புதிய கட்டண சலுகையை அறிவித்துள்ளது. முன் கோடைக்கால சலுகை யாக ரூ.599க்கு இந்திய நகரங்களுக்கிடையில் விமான பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது. இந்த சலுகைக் கட்டணத்தில் மார்ச் 01 முதல் ஏப்ரல் 13 ம் தேதி வரை பயணம் செய்யலாம். இதற்கான முன்பதிவு பிப்ரவரி 23 தொடங்கி 25 வரை நடக்கிறது. ஸ்பைஸ்ஜெட் ஆப்ஸ் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த சலுகைக் கட்டணத்தில் முன்பதிவு செய்துவிட்டு, வேறு நாட்களில் பயணம் செய்ய மாற்றங்கள் செய்தால் கட்டண வேறுபாடுகள் இருக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

கோடைக்காலத்துக்கு முன்பே இதுபோன்ற சலுகைகளை அளிப்ப தன் மூலம் சுற்றுலா செல்பவர்கள் கோடைக்காலத்துக்கு முன்பே சுற்றுலாவுக்கு திட்டமிடுவார்கள். இதனால் கோடைக்கால நெருக்கடி களைத் தவிர்க்க முடியும். மார்ச் ஏப்ரல் மாதங்கள் சுற்றுலாவுக்கு உகந்த மாதங்களாக இருக்கும். கடும் கோடைக்காலத்தில் பயண நெருக்கடிகளைவிட இது சிறந்தது என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வர்த்தகத் துறை துணைத்தலைவர் ஷில்பா பாட்டியா தெரிவித்தார்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 40 நகரங்களுக்கு 293 தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது. இதர உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களும் கட்டண சலுகை குறித்து அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டு வருகின்றன என்று துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோல சுற்றுலா பயண ஏற்பாட்டாளரான மேக்மை டிரிப் நிறுவனம் அமெரிக்காவுக்கான விமான கட்டணத்தில் ரிட்டன் டிக்கெட்டில் ரூ.20 ஆயிரம் வரை விலைக் குறைப்பு செய்துள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x