Published : 25 Feb 2016 11:05 AM
Last Updated : 25 Feb 2016 11:05 AM
இந்தியாவில் சுரங்கத் தொழிலில் முக்கிய நிறுவனமான அதானி, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேன்ட் மாகாணத்தில் 650 கோடி டாலர் மதிப்புடைய சுரங்க திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது. இந்த திட்டத்துக்கு உள்ளூர் அமைப்பு அனுமதி அளிக்காமல் தடையாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த சுரங்கம் அமைவதற்கான இழப்பீடு குறித்து உள்ளூர் அமைப் புக்கும் அதானி நிறுவனத்துக்கும் இடையில் தற்போது ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சுரங்க திட்டத்துக்கான வேலைகளை விரைவில் அதானி நிறுவனம் தொடங்க உள்ளது.
நேற்று முன்தினம் நடந்த அந்த மாகாணத்தின் ஐசாக் மண்டல குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. இந்த சுரங்க திட்டம் அமைக்க இடம் வழங்குபவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு உரிய இழப்பீடு அதானி குழுமம் வழங்க வேண்டும். அதற்கு பிறகுதான் அதானி நிறுவனம் சுரங்கத் திட்டத்துக்கு தேவையான நிதி கேட்டு வங்கிகளை அணுகுவதற்கு அனுமதிக்க முடியும் என்று இந்த மாகாணத்தின் ஐசாக் பிராந்திய மேயர் ஆனி பாகெர் கூறியுள்ளார். அதானி நிறுவனம் திட்டத்தை தொடங்குவதற்கு தேவையான வழிகளை மிக விரைவில் கவுன்சில் செய்து கொடுக்கும் என்றார்.
இந்த மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பொருளாதார பலன்களை கிடைக்க அதானி நிறுவனத்தோடு இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய அதானி சுரங்க தலைமை செயல் அதிகாரி ஜெயக்குமார் ஜனகராஜ், இந்த சுரங்க திட்டத்துக்கு குயின்ஸ் லேண்ட் மாகாணம் 140 நிபந்தனை களுடன் அனுமதி வழங்கியுள்ளது என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT