Published : 05 Feb 2016 10:09 AM
Last Updated : 05 Feb 2016 10:09 AM

இவரைத் தெரியுமா?- ஜெயந்த் கிருஷ்ணா

தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகி றார்.

டிசிஎஸ் நிறுவனத்தின் பிராந் திய தலைவராக 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இருந்தவர்.

தோஷிபா, மிட்சுஷிபி கார்ப்ப ரேஷன் ஆகிய நிறுவனங் களில் பல முக்கிய பொறுப்பு களில் இருந்துள்ளார். மேலும் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பிலும் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.்்

பிரிட்டிஷ் அமெரிக்க டொபோகோ நிறுவனத்தின் ஆலோசகர் பொறுப்பில் இருந்தவர்.

தேசிய திறன் தகுதி கட்டமைப்பை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர், கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து வருகிறார்.

டிசிஎஸ் நிறுவனத்தின் மேலாண்மை ஆலோசகராக 1994-ம் ஆண்டு தனது பணியை தொடங்கியவர். இதே நிறுவனத்தின் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து பிரிவிற்கு பிராந்திய தலைவராக இருந்துள்ளார்.

பொது மேலாண்மை, கார்ப்பரேட் உத்திகள், விற்பனை, தகவல் அமைப்புகள், கன்சல்ட்டிங், மனித வள மேம்பாடு ஆகிய துறைகளில் 30 வருட பணி அனுபவம் கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x