Published : 27 Feb 2016 10:37 AM
Last Updated : 27 Feb 2016 10:37 AM

பட்டியலிடும் பணியை தொடங்கியது என்எஸ்இ

இந்தியாவின் முக்கியமான பங்குச் சந்தையான என்எஸ்இ ஐபிஓ வெளியிடும் பணியை தொடங்கியுள்ளது. இதற்கான குழு அமைக்கப்பட்டது. கடந்த இயக்குநர் குழுவில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த குழு பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசிக்கும்.

தற்போதைய செபி விதிமுறை யின் கீழ், தங்களுடைய பங்குச் சந்தையிலேயே பட்டியலிட முடியாது. இந்த விதிமுறைக்கு பிஎஸ்இ சம்மதம் தெரிவித்தாலும், என்எஸ்இ முடியாது என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இப்போது இதே திட்டத்துடன் இந்த குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த குழுவின் உறுப்பினர் களை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா நியமனம் செய்வதற்கு இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. என்எஸ்இ பட்டியலிட இந்த குழு முக்கியமான பணியை செய்யும் என்று சித்ரா ராமகிருஷ்ணா தெரிவித்தார்.

எல்ஐசி., எஸ்பிஐ, கோல்ட் மென் சாக்ஸ், டைகர் குளோபல், சிட்டி குரூப் உள்ளிட்ட நிறுவனங் கள் என்.எஸ்.இ.யில் முதலீடு செய்திருக்கின்றன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x