Published : 06 Feb 2016 10:11 AM
Last Updated : 06 Feb 2016 10:11 AM
10,500 கோடி டாலர் மதிப்புள்ள அமேசான் நிறுவனம் இந்தி யாவில் ஏற்கனவே இ-காமர்ஸ் தொழிலை நடத்தி வருகிறது. கடந்த புதன்கிழமை மளிகை பொருட்களை விற்பனை செய் வதற்காக புதிய செயலியை அமேசான் நிறுவனம் பெங்களூ ருவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் மளிகை பொருட் கள் விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறைவான லாப வரம்பு காரணத்தினால் நீடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் உலகின் இரண்டாவது மிகப்பெரிய இ-டெய்லர் நிறு வனமான அமேசான் உள்நாட்டு சந்தையில் மிகப்பெரிய போட்டி யாக வருவதாகத் தெரிகிறது.
ஸ்நாக்ஸ், சமையல் பொருட் கள், அழகு சாதன பொருட்கள் உட்பட 6,000 பொருட்கள் இதன் மூலம் விநியோகம் செய்ய இருக் கிறது. இந்தப் பொருட்களை இரண்டு மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேரத்திற்குள் ளேயே விநியோகம் செய்ய உள்ளதாகவும் 250 ரூபாய்க்கு மேல் உள்ள ஆர்டர்களுக்கு விநியோக கட்டணம் ஏதும் இல்லை என்று அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த இ-டெய்லர் நிறுவனம் பிக்பஜார், ரிலையன்ஸ் பிரஷ், பாரத் பெட்ரோலியம் இன் அண்ட் அவுட் மற்றும் புட் வேர்ல்டு போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது.
``கடந்த வருடம் சோதனை முயற்சியாக மளிகை பொருட்கள் மற்றும் தினந்தோறும் தேவைப்ப டும் பொருட்களை விற்க தொடங் கப்பட்ட `கிராணா நவ்’லிருந்து நிறையக் கற்றுக் கொண்டோம். இந்த முயற்சி எங்களை ஊக்கு வித்துள்ளது’’ என்று அமேசான் இந்தியாவின் வகைப்பிரிவு மேலாண்மை துணைத்தலைவர் சமிர் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மளிகை பொருட்களை விநியோகம் செய்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங் கள் மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து வருகின்றன.
நான்கு வருடத்திற்கு முன் மொத்தம் 40 நிறுவனங்கள் இருந்தன. தற்போது நிறுவனங்கள் மிகவும் குறைந்துவிட்டன. குரோபெர்ஸ், பிக் பாஸ்கட், பெப்பர்டேப், ஸோப்நவ் உட்பட நிறுவனங்கள் மட்டுமே இருந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT