Published : 16 Feb 2016 11:02 AM
Last Updated : 16 Feb 2016 11:02 AM

இவரைத் தெரியுமா? - பி.எஸ்.ஜெயக்குமார்

$ பொதுத் துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர். பொதுத்துறை வங்கி தலைவராக வெளியிலிருந்து முதன் முதலில் நியமிக்கப்பட்டவர்.

$ ஜாம்ஜெட்பூர் செயிண்ட் சேவியர் மேலாண்மை பள்ளியில் மேலாண்மை யியல் பட்டம், லண்டன் அரசியல் பொருளாதார பள்ளியில் பட்டம் மற்றும் இந்திய பட்டய கணக்காளர் தகுதியும் பெற்றவர்.

$ விபிஹெச்சி வேல்யூ பட்ஜெட் ஹவுசிங் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவர்.

$ ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இந்த நிறுவனத்தில் பொறுப்புகளில் இல்லாத நிறுவனர் இயக்குநராகவும் பணியாற்றினார்.

$ சிட்டி வங்கியில் 23 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த வங்கியில் 1986 ல் சிங்கப்பூரில் பணிக்குச் சேர்ந்து பல பிரிவுகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சிட்டி பைனான்ஸியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

$ இந்தியாவில் சில்லரை வங்கித்துறையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டவர். முதன் முதலில் இந்தியாவில் வங்கியில் சொத்து பாதுகாப்பு முறை மற்றும் பல மொழிகளில் ஏடிஎம் வசதியையும் கொண்டு வந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x