Published : 15 Feb 2016 11:07 AM
Last Updated : 15 Feb 2016 11:07 AM
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா பெங்களூரை சார்ந்த தொழிநுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான `ஸ்நாப்பிஸ்’ (SnapBizz) நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இது 2016-ம் ஆண்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரத்தன் டாடா செய்யும் எட்டாவது முதலீடு ஆகும். இதுவரை 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் டாடா முதலீடு செய்திருக்கிறார்.
2016-ம் ஆண்டு ஜனவரி மாதம், ஸ்நாப்பிஸ் நிறுவனம் ஜங்கிள் வெஞ்சர்ஸ், டாரஸ் வேல்யூ கிரியேஷன், கோன்லி வெஞ்சர்ஸ், புளூம் வெஞ்சர்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து 72 லட்சம் டாலர் நிதியை பெற்றது.
முறைப்படுத்தப்படாத துறையாக இருந்து வரும் சில்லரை வர்த்தகத் துறையை மாற்றும் நோக்கில் ஸ்நாப்பிஸ் செயல்பட்டு வருகிறது. தற்போது மும்பை, புனே, டெல்லி, ஹைதராபாத், சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மளிகை கடைகளுடன் இந்த நிறுவனம் இணைந்து செயல்படுகிறது. மேலும் இதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
“ரத்தன் டாடா முதலீடு செய்திருப்பது எங்களின் தொழில் தொழில் யோசனைக்கு மிகப் பெரிய ஊக்கம் அளிக்கிறது. நாங்கள் சிறு கடைகளில் ட்ஜிட்டல் புரட்சியை தொடர்ந்து செய்வோம்” என்று ஸ்நாப்பிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பிரேம் குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எப்எம்ஜிசி துறையில் இயங்கி வரும் ஸ்நாப்பிஸ் நிறுவனம் 2013-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT