Published : 24 Dec 2015 10:08 AM
Last Updated : 24 Dec 2015 10:08 AM
முக்கிய தொழில்துறையினர் உட்பட 48,000 ஆயிரம் பேர் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஆதரவான பிரசார இயக்கத்தில் கையெழுத்திட்டுள் ளனர். நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டு மென இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) உறுப்பினர்கள் இதை தொடங்கியுள்ளனர்.
இந்த பிரசாரத்துக்கு சர்வதேச கவனத்தை ஈர்க்கும் விதமாக சேஞ்ச் டாட் ஓஆர்ஜி தளத்தில் பதி விட்டுள்ளனர். ஜிஎஸ்டி நடை முறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதம் முக்கிய அக்கறை காட்ட வேண்டிய விஷயம் என்று கூறியுள் ளனர். அனைத்து பங்குதாரர்களிட மும் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற ஆதரவளிக்க வேண் டும் என கோரியுள்ளது. மக்களவை யில் இந்த மசோதா நிறைவேறும் என எதிர்பார்த்ததாக சிஐஐ இந்த அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த அறிக்கை டிசம்பர் 19 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஹெச்டிஎப்சி தலைவர் தீபக் பரேக், கோத்ரெஜ் தலைவர் ஆதி கோத்ரெஜ், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் தலைவர் சதீஷ் ரெட்டி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT