Published : 19 Dec 2015 10:20 AM
Last Updated : 19 Dec 2015 10:20 AM

ஹெச்2பி விசா கட்டணம்: 400 சதவீதம் உயர்த்த அமெரிக்கா முடிவு

அமெரிக்க அரசு ஹெச்2பி விசா கட்டணங்களை 4 மடங்கு உயர்த்த திட்டமிட்டிருக்கிறது. ஹெச்2பி விசா என்பது முறையான தொழில் பயிற்சி இல்லாத வெளிநாடு பணி யாளர்களுக்கு அமெரிக்கா வழங் கும் விசாவாகும். இந்த கட்டண உயர்வால் இந்தியர்களுக்கு பெரிய பாதிப்பில்லை. இந்த விசா மூலம் இந்தியாவில் இருந்து செல்பவர்கள் குறைவு. ஓட்டல், கட்டுமானம், டிரைவர் உள்ளிட்ட துறைகளில் வேலை செய்பவர்கள் ஹெச்2பி விசாவில் அமெரிக்காவுக்கு செல்வார்கள்.

அதேபோல ஹெச்1பி கட்டணத் தையும் இரு மடங்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஹெச்1பி மற்றும் எல்1பி விசாக் களுக்கு சிறப்புக் கட்டணமாக 4,500 டாலர் வரை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்த்கேர் மற்றும் பயோமெட்ரிக் திட்டங் களுக்காக இந்த கட்டணம் விதிக் கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட் டுள்ளது. ஆனால் முன்பு விசா காலம் ஐந்து வருடங்களாக இருந் தது, ஆனால் இப்போது 10 வருடங் களாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த கூடுதல் கட்டணம் மூலம் ஆண்டுக்கு 100 கோடி டாலர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பாதிப்பு இல்லை

இந்த கட்டண உயர்வு பாதிப் பில்லை என்று இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். ஆனால் அதே சமயம் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது.

இந்த கட்டண உயர்வு இந்திய ஐடி துறையை பாதிக்காது. 2,000 டாலர் அல்லது 4,000 டாலர் என்பது முக்கியமில்லை. வாடிக்கையாளர் களுக்கு சிறப்பான சேவையை வழங்க வேண்டும். இந்திய ஐடி துறை இதனை ஏற்கெனவே செய்து வருகிறது.

அமெரிக்காவை பொருத்த வரை அவர்களது நாட்டுக்கு எது நல்லதோ அதைத்தான் அவர் கள் மேற்கொள்வார்கள். ஒரு வெளிநாட்டுக்காராக நாம் என்ன செய்ய முடியும். நாம் செய்ய முடிந்ததெல்லாம் நம்முடைய வேலையை சிறப்பாக செய்வது தான். நம் வேலையை செய்யும் போது இந்திய ஐடி துறையின் மதிப்பு புரியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x