Published : 08 Dec 2015 10:14 AM
Last Updated : 08 Dec 2015 10:14 AM
தமிழகத்தில் பெய்துள்ள கன மழை, வெள்ளம் காரணமாக வருமான வரித்துறையினர் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் டிடிஎஸ் எனும் வருமான வரித் தொகையை செலுத்துவதற்கான காலக் கெடுவை டிசம்பர் 20-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
நவம்பர் மாத சம்பளத்தில் பிடிக்கப்பட்ட தொகையை செலுத்துவதற்காக ஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட டிசம்பர் 7-ம் தேதி காலக்கெடு தற்போது டிசம்பர் 20-வரை செலுத்தலாம் என நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வருவாய்த்துறையினர் வெளி யிட்ட செய்திக் குறிப்பில் உற்பத்தி வரியைச் செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT