Last Updated : 24 Oct, 2015 09:25 AM

 

Published : 24 Oct 2015 09:25 AM
Last Updated : 24 Oct 2015 09:25 AM

ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான ரியல் எஸ்டேட் பணிகள் தொடங்கப்படவே இல்லை: அசோசேம் ஆய்வு தகவல்

ரூபாய் 14 லட்சம் கோடி மதிப் புள்ள ரியல் எஸ்டேட் பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை என்று அசோசேம் தெரிவித்துள்ளது. 2014-15ஆம் நிதியாண்டில் 3,540 ரியல் எஸ்டேட் திட்டங்களில் 75 சதவீத பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை என ஆய்வு முடிவு தெரிவிப்பதாக அசோசேம் கூறியுள்ளது.

இந்த ஆய்வின் படி 3,540 ரியல் எஸ்டேட் திட்டங்களில் 2,300 திட்டங்கள் இன்னும் தொடங்கப் படவில்லை என்றும் 1000 திட் டங்களை தொடங்கி முடிவடை யாத நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

``இந்தியாவில் ரியல் எஸ் டேட் திட்டத்தை பொருத்தமட்டில் சராசரியாக ஒரு திட்டத்தை முடிக்க 33 மாதங்கள் காலதாமத மாகிறது” என்று அசோசேம் செய லாளர் டி.எஸ்.ராவத் கூறியுள் ளார்.

திட்டங்களை முடிப்பதில் ஆந்திர பிரதேசம் அதிகபட்சமாக 45 மாதங்களும், மத்திய பிரதேசம் 41 மாதங்களும், தெலங்கானா 38 மாதங்களும் காலதாமதம் செய்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.

ரியல் எஸ்டேட் துறையில் இந்தியாவிலேயே அதிகமாக மஹாராஷ்டிரா மாநிலம் 21 சதவீதம் முதலீடு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து உத்தர பிரதே சம் 14% குஜராத் 13% கர்நாடகா 12% முதலீடு செய்துள்ளது. தமிழ் நாடு மற்றும் தெலங்கானாவும் 6% முதலீட்டை செய்துள்ளன. அசாம், பிஹார், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் 2 சதவீதத்துக்கு குறைவாகவே முதலீடு செய்துள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x