Published : 09 Oct 2015 09:34 AM
Last Updated : 09 Oct 2015 09:34 AM

இவரைத் தெரியுமா?- கிஷோர்குமார்.ஆர்

வேதாந்தா நிறுவனத்தின் சேசா அயர்ன்ஒர் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி. பிப்ரவரி 2015-ல் இருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

சந்தையிடல், வர்த்தகம், கணக்குப்பதிவு, சில்லரை தொடர் வர்த்தகம், கையகப்படுத்துதல் மற்றும் இணைப்பு, மனித வள மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் வல்லுனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் அனுபவம் கொண்டவர்.

ஏப்ரல் 2003-ல் இந்த குழுமத்தில் இணைந்தார். குழும நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

வேதாந்தா ஸிங் இண்டர்நேஷனல், வேதாந்தா ரிசோர்ஸ்ஸஸின் ஆப்பிரிக்க மெட்டல் பிரிவு, ஜாம்பியாவில் உள்ள கொன்கோலா தாமிர சுரங்கம் மற்றும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இந்த குழுமத்தில் இணைவதற்கு முன்பு ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தில் மண்டல வர்த்தக மேலாளராக 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றவர். இந்திய பட்டய கணக்காளர் பயிற்சி பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x