Published : 06 Oct 2015 10:22 AM
Last Updated : 06 Oct 2015 10:22 AM
நெய், மற்றும் வெண்ணெய் போன்றவற்றுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
சர்வதேச பொருள் சந்தையோடு உள்நாட்டு தயாரிப்புகள் போட்டிபோட மேலும் இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா குறிப்பிட்டார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே நெய் மற்றும் வெண் ணெய்க்கான இறக்குமதி வரியை 30 முதல் 40 சதவீதம்வரை உயர்த்த திட்டமிட்டிருந்தோம். இந்த முடிவு எடுக்கப்பட்டவுடன் உடனடியாக இது அமல்படுத்தப்பட்டதாக நேற்று குறிப்பிட்டார். இது மார்ச் 2016வரை நடைமுறையில் இருக்கும் என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT