Published : 22 Oct 2020 04:14 PM
Last Updated : 22 Oct 2020 04:14 PM
குறைந்தபட்ச ஆதரவு விலையில் 2020-21 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதலில் நெல் கொள்முதல் ஒரு கோடி மெட்ரிக் டன்னைக் கடந்துள்ளது.
2020-21 கரீப் பருவத்திற்குத் தேவையான சந்தைப்படுத்துதல் தொடங்கப்பட்டதையடுத்து கடந்த காலங்களைப் போலவே இந்த வருடமும் அதே குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடமிருந்து அரசு பயிர்களைக் கொள்முதல் செய்கிறது.
நெல் கொள்முதல் ஒரு கோடி மெட்ரிக் டன்னைக் கடந்து உத்வேகம் அடைந்துள்ளது. 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 9.37 லட்ச விவசாயிகளிடமிருந்து ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூபாய்18880 மதிப்பில் ரூபாய் 20180.50 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையில் 106.88 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
2019-20 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதலில் நெல் கொள்முதல் 84.68 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. எனவே கடந்த காலத்தை விட இந்த வருடம் 25.92 சதவீதம் அதிக கொள்முதல் நடைபெற்றுள்ளது.
மேலும், அக்டோபர் 20ஆம் தேதி வரை அரசு தன் முதன்மை முகமைகளின் மூலம் ரூபாய் 6.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையில், 863.39 மெட்ரிக் டன் அவரை விதையும், உளுந்தும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த 819 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.
இதேபோல 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில், 5089 மெட்ரிக் டன் கொப்பரையைக் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.
பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பருத்திக் கொள்முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சுமுகமாக நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 20ஆம் தேதி வரை ரூபாய் 66842.28 லட்சம் 236748 பேல்கள் 46706 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 2335 பேல்கள் அதிகமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT