Published : 07 Oct 2020 03:37 PM
Last Updated : 07 Oct 2020 03:37 PM

நடைபாதை வியாபாரிகள் நலத் திட்டம்; 7.85 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன்களுக்கு ஒப்புதல்

நடைபாதை வியாபாரிகளுக்கான பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் 7.85 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் நடைபாதை வியாபாரிகள் தற்சார்பு நிதி( ஸ்வா நிதி) திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமரின் ஸ்வா நிதி இணையதளம் மற்றும் எஸ்பிஐ இணையதளம் இடையே ஏபிஐ ஒருங்கிணைப்பை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர், துர்கா சங்கர் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் பிரதமரின் ஸ்வாநிதி இணையதளம் மற்றும் எஸ்பிஐ இ-முத்ரா இணையதளம் இடையே, தகவல்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொண்டு, நடைபாதை வியாபாரிகளின் கடன்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் ஒப்புதல் அளிக்க முடியும். இது தொழில் முதலீடு கடன் கோரும் நடைபாதை வியாபாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதேபோல் மற்ற வங்கிகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டங்கள் விரைவில் நடக்கவுள்ளன.

கோவிட்-19 முடக்கம் காரணமாக பாதிக்கப்ட்ட நடைபாதை வியாபாரிகளுக்காக, பிரதமரின் ஸ்வாநிதி திட்டம் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் 50 லட்சம் நடைபாதை வியாபாரிகள் பயனடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடைபாதை வியாபாரி, ரூ.10 ஆயிரம் தொழில் முதலீட்டு கடன் பெற்று, அதை மாத தவணையாக ஒராண்டுக்குள் திருப்பிச் செலுத்த முடியும்.

சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தினால், ஆண்டுக்கு 7 % வட்டி மானியம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். கடனை முன் கூட்டியே செலுத்தினால் அபராதம் விதிக்கப்படாது. மாத தவனையை டிஜிட்டல் மூலமாக செலுத்தினால் ஆண்டுக்கு ரூ.1,200 வரை பணம் திரும்ப கிடைக்கும்.

பிரதமரின் ஸ்வா நிதி திட்டத்தின் கீழ், கடந்த 6ம் தேதி வரை, 20.50 லட்சம் கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 7.85 லட்சம் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 2.40 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x