Published : 07 Oct 2020 02:03 PM
Last Updated : 07 Oct 2020 02:03 PM

கரோனா தொற்று; குணமடைந்தவர்களில் 75 சதவீதம் பேர்  தமிழகம் உட்பட 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களில் 75 % பேர் மகாராஷ்டிரா, கர்நாடாக, ஆந்திரா, தமிழகம், கேரளா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ளனர்.

இந்தியாவில் கொவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் வீதம் 85% கடந்தது

இந்தியா ஒரு முக்கிய மைல் கல்லை கடந்துள்ளது. கடந்த சில வாரங்களாக, நாட்டில் கோவிட் பாதிப்பிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்ததால், குணமடைந்தோர் வீதம் 85%-ஐ கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், குணமடைந்தோர் எண்ணிக்கை, புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 82,203 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 72,049 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை, 57,44,693 ஆக அதிகரித்துள்ளது. இது குணமடைந்தோர் எண்ணிக்கையில், இந்தியாவின் உலகளாவிய நிலையை உயர்த்தியுள்ளது.

குணமடைவோர் எண்ணிக்கை உயர்வதால், சிகிச்சை பெறுபவர்களுக்கும், குணமடைந்தோர்களுக்குமான இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களை விட (9,07,883), குணமடைந்தவர்கள் 48 லட்சத்துக்கும் அதிகமாக (48,36, 810) உள்ளனர். இது 6.32 மடங்கு அதிகம்.

மொத்த பாதிப்பில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 13.44% -மாக குறைந்துள்ளது மற்றும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

18 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் குணமடைவோர் வீதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

குணமடைந்தவர்களில் 75 % பேர் மகாராஷ்டிரா, கர்நாடாக, ஆந்திரா, தமிழகம், கேரளா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 72,049 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 78 % பேர் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 986 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x