Published : 03 Sep 2015 10:09 AM
Last Updated : 03 Sep 2015 10:09 AM

இவரைத் தெரியுமா?- ரேணுகா ராம்நாத்

மல்ட்டிப்ளிஸ் ஆல்டர்நேட் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர். 2009ல் இந்த நிறுவனத்தை தொடங்கினார்.

வங்கித்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர்.

இந்தியாவில் உள்ள தனியார் முதலீட்டு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். கடைசியாக ஐசிஐசிஐ வென்ச்சர் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பில் இருந்தார்.

இசை மற்றும் ஓவியங்கள் மீது ஆர்வம் கொண்டவர்.

மும்பை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஜேடிஐ கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டமும், அதே பல்கலைக்கழகத்தில் மேலாண்மையில் பட்டமும் பெற்றவர்.

ஹார்வர்டு பிசினஸ் பள்ளியில் அட்வான்ஸ்டு மேனேஜ்மெண்ட் புரோகிராம் கல்வியும் முடித்துள்ளார்.

பிசினஸ் டுடே வழங்கிய சக்தி மிக்க 25 பிசினஸ் பெண்கள் பட்டியல் இடம் பிடித்தவர். எகனாமிக் டைம்ஸ் சக்திமிக்க செயல் அதிகாரிகள் பட்டியலில் இடம் பெற்றவர்.

போர்ப்ஸ் வெளியிட்ட ஆசிய முதலீட்டாளர்கள் அளவில், இந்த ஆண்டு டாப் 25 பிசினஸ் பெண்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x