Published : 29 Jul 2020 03:36 PM
Last Updated : 29 Jul 2020 03:36 PM

தங்கம் விலை மீண்டும் உயர்வு; பவுன் ரூ.40,600 ஆக விற்பனை

தங்கம் விலை இன்று மாலை நிலவரப்படி மீண்டும் உயர்ந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

இதுவரை இல்லாத அளவில் நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சமாக கிராம் 5 ஆயிரம் ரூபாயை கடந்தது.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 உயர்ந்து ரூ.5064-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.40512க்கு விற்பனையானது.

மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5075-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.40600க்கு விற்பனையானது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 42624 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் 71.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x