Last Updated : 01 Sep, 2015 10:05 AM

 

Published : 01 Sep 2015 10:05 AM
Last Updated : 01 Sep 2015 10:05 AM

கனரா வங்கியில் மத்திய அரசு ரூ.947 கோடி முதலீடு

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் மூலதன தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மத்திய அரசு ரூ. 947 கோடியை முதலீடு செய்கிறது.

டெல்லியில் நேற்று நடை பெற்ற வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்தில் மத்திய அரசின் முதலீட்டு முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதலீட்டுக்கு ஈடாக பங்குகளை முன்னுரிமை அடிப்படையில் அளிக்கவும் இக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப் பட்டது.

மத்திய அரசு முதலீடு செய்வது தொடர்பாக அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் கனரா வங்கி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x