Published : 28 Aug 2015 10:23 AM
Last Updated : 28 Aug 2015 10:23 AM

இவரைத் தெரியுமா?- பிரவீண் பி காட்லே

டாடா கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2007-ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார்.

டாடா குழுமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்.

பாம்பே பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், சிஏவும் படித்தவர்.டாடா குழுமத்தில் முதல் ஐந்து வருடங்கள் டாடா ஐபிஎம் கூட்டு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணிபுரிந்தார். அதன் பிறகு டாடா மோட்டார் நிறுவனத்தில் நிதிப் பிரிவு துணைத்தலைவராக இருந்தார். அதன் பிறகு நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் செயல் இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்தவர். அதனால் கூடிய விரைவில் மீண்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்கு மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்ற செய்திகள் உலா வருகின்றன.

டாடா குழுமத்தின் பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருக்கிறார். சிறந்த தலைமை நிதி அதிகாரிக்கான விருதுகளை பிஸினஸ் டுடே உள்ளிட்ட சில பத்திரிகைகள் இவருக்கு வழங்கி இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x