Published : 26 Aug 2015 10:08 AM
Last Updated : 26 Aug 2015 10:08 AM

இவரைத் தெரியுமா?- ரவி காந்த். எஸ்

டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் செயல் துணைத் தலைவர். நிறுவனத்தின் கைக்கடிகார பிரிவை கையாண்டு வருகிறார். ஜூலை 2015லிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.

1982-ல் ஹெச்சிஎல் நிறுவனத்தில் சேர்ந்தார். விற்பனை மற்றும் சந்தைப் பிரிவில் 6 ஆண்டுகள் பணியாற்றினார்.

டைட்டன் நிறுவனத்தில் 1988-ல் பணிக்குச் சேர்ந்தார். நேரடி சந்தை, சில்லரை விற்பனை, ஏற்றுமதி பிரிவுகளின் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றினார்.

டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் டேராடூன் உற்பத்தி ஆலை தொடக்கத்தின் திட்ட தலைவராக பொறுப்பு வகித்தவர்.

2005 முதல் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கடிகாரம் மற்றும் அணிகலங்கள் பிரிவு செயல்பாடுகளுக்கான நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.

கடிகாரம் மற்றும் அணிகலன்களுக்கான சர்வதேச செயல்பாடு களுக்காக 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார்.

2007 முதல் கண்ணாடி தொழில் பிரிவையும் வழி நடத்தி வருகிறார்.

இளநிலை அறிவியல் பட்டமும், புதுடெல்லியில் உள்ள எப்எம்எஸ் கல்வி நிறுவனத்தில் மேலாண்மையியலில் பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x