Published : 20 Aug 2015 10:06 AM
Last Updated : 20 Aug 2015 10:06 AM
டாடா கேபிடல் நிறுவனத்தை சேர்ந்த டாடா ஆப்பர்ச்சூனிட்டிஸ் பண்ட் (டிஓஎப்) என்னும் பிரைவேட் ஈக்விட்டி பண்ட் உபெர் நிறுவனத் தில் கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளது. எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது, எவ்வளவு சதவீத பங்குகள் கைமாறின என்பது குறித்து இரு நிறுவனங்களும் தகவல்களை வெளியிடவில்லை.
உபெர் நிறுவனத்தில் முதலீடு செய்யும் இரண்டாவது இந்திய நிறுவனம் டாடா ஆப்பர்ச் சூனிட்டிஸ் பண்ட் (டிஓஎப்) ஆகும். ஏற்கெனவே டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தை சேர்ந்த டைம்ஸ் இன்டர்நெட் 150 கோடி ரூபாயை முதலீடு செய்து குறிப்பிட்ட சதவீத பங்குகளை வாங்கியது.
வெளிநாட்டினை தலைமை யாக கொண்டு செயல்படும் நிறுவனத்தில் டிஓஎப் செய்யும் முதல் முதலீடு இதுவாகும். உபெர் நிறுவனத்தின் வளர்ச்சி யில் பங்கு கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று டிஓஎப் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக உபெர் நிறுவனத் தின் போட்டி நிறுவனமான ஓலா நிறுவனத்தில் ரத்தன் டாடா தன்னுடைய சொந்த பணத்தை முதலீடு செய்திருக்கிறார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னதாக உபெர் நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இப்போதைக்கு 18 நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 100 கோடி டாலரை (ரூ.6,500 கோடி) கூடுதலாக முதலீடு செய்யப்போவதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இன்னும் 6 முதல் 9 மாதங்களில் ஒரு நாளைக்கு 10 லட்சம் பயணம் என்பதை இலக்கை நிறுவனம் வைத்திருக்கிறது. இப்போது கிடைத்திருக்கும் முதலீட்டை புதிய நகரங்களில் விரிவாக்கப்பணிகள், புதிய புராடக்ட்கள் உள்ளிட்டவற்றுக்கு முதலீடு செய்யப்படும் என்று உபெர் தெரிவித்திருக்கிறது.
டாடா ஆப்பர்ச்சூனிட்டிஸ் பண்ட் இதுவரை 40 கோடி டாலரை பல நிறுவனங்களில் முதலீடு செய்திருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT