Published : 06 Aug 2015 10:00 AM
Last Updated : 06 Aug 2015 10:00 AM

வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் தொடக்கம்

மாபா வேலைவாய்ப்பு நிறுவனத் தின் நிறுவனரான பாண்டியராஜன் சியெல் என்கிற வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனத்தை நேற்று சென்னையில் தொடங்கியுள்ளார்.

அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் நிறுவனமாக வளரவும், முதல் ஆண்டில் ரூ.10 கோடி வருமானம் ஈட்ட இலக்கு வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிறுவனம் சியெல் வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் மற்றும் சியெல் ஐடி சொல்யூஷன் என இரண்டு நிறுவனங்களாக இயங்கும் என குறிப்பிட்டார்.

பாண்டியராஜன் மற்றும் லதா பாண்டியராஜன் தவிர மேலும் இரண்டு பேரை பங்குதாரர்களாகக் கொண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. சியெல் என்றால் பிரெஞ்சு மொழியில் வானம் என்று அர்த்தமாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x