Published : 10 Oct 2019 04:27 PM
Last Updated : 10 Oct 2019 04:27 PM
புதுடெல்லி
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலை அதிகரிக்கவும், அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பரிந்துரைகள் அளிப்பதற்காக மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘‘ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் பல்வேறு முடிவுகளுக்கு ஏற்ப பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு ஏற்ப ஜிஎஸ்டி வரி வசூலை அதிகரிக்கவும், நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யவும் பரிந்துரைகள் அளிப்பதற்காக அதிகாரிகள் அடங்கிய கமிட்டி ஒன்று அமைக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி வரியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்வது, கண்காணிப்பு, முறைகேடு செய்வதை தடுப்பது, சூழலுக்கு ஏற்ற மாற்றம் என பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து இந்த குழு பரிந்துரைகளை அளிக்கும்.
இதுமட்டுமின்றி ஜிஎஸ்டி வரி வட்டத்தை விரிவாக்கவும், அதற்கு ஏற்ப சட்டத்தில் மாற்றம் செய்யவும், வரியை ஏய்ப்பை தடுக்கவும், தகவல்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து பார்த்து இந்த கமிட்டி பரிந்துரைகளை அளிக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT