Published : 09 Aug 2019 08:46 AM
Last Updated : 09 Aug 2019 08:46 AM

‘பயிர் காப்பீட்டு இழப்பீடு கோரிக்கையை மாநில அரசுகள் ஆராய வேண்டும்’

புதுடெல்லி

மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இழப்பீடு கோரி வரும் விண்ணப்பங்களில் 50 சதவீத விண்ணப்பங்கள் குறிப்பிட்ட 50 மாவட்டங்களில் இருந்தே ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இவ்வகையான இழப்பீட்டு கோரிக்கைகளை முறையாக ஆராய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு, பிரதம மந்திரி பாசல் பீமா யோஜனா (பிஎம்எஃப்பிஒய்) என்ற பயிர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அதன்படி, அந்தக் காப்பீட்டு திட்டத்தில் இணைந் துள்ள விவசாயிகள், பயிர் விளைச் சல் பாதிக்கப்படும்போது, அதற் கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

இழப்பீட்டு தொகை

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 600 மாவட்டங்களில் குறிப்பிட்ட 50 மாவட்டங்களில் இருந்து மட்டும் தொடர்ந்து இழப்பீட்டு தொகை கோரப்படுகிறது.

இந்நிலையில் மாநில வேளாண் துறை அமைச்சர் கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, இவ்வகையான இழப் பீட்டு கோரிக்கையை மாநில அரசு கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பயிர் விளைச்சல் சிறப்பாகவே அமைந் துள்ளது. ஆனாலும், பெறப்பட்ட காப்பீட்டுத் தொகையில் 80 சத வீதத்தை இன்சூரன்ஸ் நிறுவனங் கள் விவசாயிகளுக்கு இழப்பீடாக கொடுத்துள்ளன. மீதமுள்ள தொகையில் 15 சதவீதத்தினை ஆபத்துகால நிவாரணத்துகாக ஒதுக்குகின்றன. எனில் அவர் களுடைய லாபம் என்பது 5 முதல் 6 சதவீதத்துக்குள்ளாகவே இருக்கின்றன. ஆனால் விவசாயி கள் தங்கள் பணத்தை கொண்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கின்றன என்று நினைக்கின்றனர்.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விவாசயிகளிடமிருந்து வசூல் செய்யும் காப்பீட்டு பணத்தை தனிக் கருவூலத்தில் பாதுகாத்து, தேவைப்படும் போது அவற்றில் இருந்து விவசாயிகளுக்கு இழப் பீடு வழங்குவதற்கான திட்டத்தை யும் அரசு பரிசீலித்து வருவாதாக கூறப்படுகிறது.

அதிக விண்ணப்பங்கள்

குஜராத் மாநிலத்தில் சவுரா ஸ்ட்ரா, ராஜஸ்தான் மாநிலத்தில் சுரு, மகாரஸ்டிராவில் அவுரங்கா பாத் மற்றும் ஜல்னா ஆகிய மாவட் டங்களில் இருந்து பயிர் இழப்பீடு கேட்டு அதிக விண்ணப்பங்கள் வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x