Last Updated : 18 May, 2015 10:13 AM

 

Published : 18 May 2015 10:13 AM
Last Updated : 18 May 2015 10:13 AM

4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட நிதிப் பற்றாக்குறை

2014-15-ம் நிதி ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை 4 சதவீதத் துக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக் கிறது. அரசாங்கம் நிர்ணயம் செய்த இலக்கை தாண்டி நிதிப் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்பட்டி ருக்கிறது.

கடந்த யூ.பி.ஏ அரசு நிதிப் பற்றாக்குறை இலக்கினை 4.1 சதவீதமாக நிர்ணயம் செய்தது. முந்தைய அரசு நிர்ணயம் செய்த இந்த இலக்கு சவாலா னது என்றாலும் இதனை ஏற்றுக்கொள்கிறேன் என நிதி அமைச்சராக பொறுப்பேற்ற சமயத்தில் அருண் ஜேட்லி தெரிவித்தார். இப்போது அதனை செயல்படுத்தி காட்டி இருக்கிறார்.

2014-15-ம் ஆண்டின் நிதிப் பற்றாக்குறை 5,01,880 கோடி ரூபாயாகும். ஜிடிபியில் இது 4%.

இதேபோல வருவாய் பற்றாக்குறையும் 2.8 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் வருவாய் பற்றாக் குறை 2.9 சதவீதமாக நிர்ண யிக்கப்பட்டிருந்தது. வருவாய் பற்றாக்குறை 3,58,306 கோடியாக உள்ளது.

2014-15ம் நிதி ஆண்டில் வரி வருவாய் 9 சதவீதம் உயர்ந்து ரூ. 12,45,037 கோடியாக உள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை இலக்கு 3.9 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த நிதி ஆண்டில் 3.5 சதவீதமாகவும், 2017-18ம் நிதி ஆண்டில் 3 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x