Published : 22 May 2015 10:10 AM
Last Updated : 22 May 2015 10:10 AM

ரூ.300 கோடி முதலீடு செய்ய ஸ்பைஸ்ஜெட் திட்டம்

300 கோடி ரூபாயை நிறுவனத்தில் முதலீடு செய்ய ஸ்பைஸ்ஜெட் திட்டமிட்டிருக்கிறது. பல வகை யான முதலீட்டு முறைகளின் மூலம் இந்த முதலீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் நடந்த இயக் குநர் குழுவில் இதற்கான முடிவு எட்டப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் விமானங்களின் எண்ணிக்கையை 45 முதல் 50 ஆக உயர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இப்போதைக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 35 விமானங்கள் உள்ளன. இதில் 20 போயிங் 737 விமானங்களும், பம்பார்டியர் கியூ 40 வகையைச் சேர்ந்த 15 விமானங்களும் உள்ளன.

தவிர ஸ்பைஸ்ஜெட் நிறுவனத் தின் தலைவர் அஜய் சிங் மனைவி ஷிவானி சிங் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பட்டியலிடப்பட்ட நிறுவனங் களின் இயக்குநர் குழுவில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர் இருக்க வேண்டும் என்று செபி நிபந்தனை விதித் திருந்தது. ஸ்பைஸ்ஜெட் பெண் இயக்குநரை நியமித்திருந்தாலும் செபி நிர்ணயம் செய்திருந்த காலக் கெடு முடிவடைந்ததால் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x