Published : 09 May 2015 04:27 PM
Last Updated : 09 May 2015 04:27 PM
நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 62% சரிந்து ரூ.306 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.806 கோடியாக நிகரலாபம் இருந்தது.
வாராக் கடன்களுக்காக ஒதுக்கீடு செய்த தொகை அதிகம் என்பதால் வங்கியின் நிகரலாபம் குறைந்தது என்று வங்கியின் செயல் இயக்குநர் கௌரி சங்கர் தெரிவித்தார்.
கடந்த வருட காலாண்டை விட வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை 87% உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 1,755 கோடி ரூபாய் அளவுக்கு ஒதுக்கீடு இருந்தது, இப்போது 3,281 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
மார்ச் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் 7.7% உயர்ந்தது. கடந்த வருடம் ரூ.12,498 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.13,455 கோடியாக உள்ளது.
ஒரு பங்குக்கு 3.30 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்பட்டிருக்கிறது. முடிவுகள் மோசமாக இருந்ததால் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 6.57 சதவீதம் சரிந்து 145 ரூபாயில் பங்கின் வர்த்தகம் முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT