Published : 23 May 2015 10:22 AM
Last Updated : 23 May 2015 10:22 AM

எஸ்பிஐ நிகர லாபம் 23% உயர்வு

நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) மார்ச் காலாண்டு நிகர லாபம் 23 சதவீதம் உயர்ந்து 3,742 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3,040 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.

மொத்த வருமானம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.48,616 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.42,443 கோடி ரூபாயாக இருந்தது.

ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 20% உயர்ந்து ரூ.13,102 கோடியாக உள்ளது. 2013-14-ம் நிதி ஆண்டில் 10,891 கோடி ரூபாயாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 13% உயர்ந்து 1,74,973 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த 2013-14ம் நிதி ஆண்டில் 1,54,904 கோடி ரூபாயாக இருந்தது.

ஒரு பங்குக்கு ரூ.3.50 டிவிடெண்ட் வழங்குவதாக எஸ்பிஐ அறிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x