Published : 31 May 2015 11:45 AM
Last Updated : 31 May 2015 11:45 AM

என்எல்சி நிகரலாபம் 37% உயர்வு

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரே ஷன் (என்.எல்.சி.) நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 37% உயர்ந்து ரூ.676 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் 494 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. ஆனால் நிறுவனத்தின் மொத்த வருமானம் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் ரூ.1,709 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.1,682 கோடியாக சரிந்திருக்கிறது.

ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகரலாபம் சிறிதளவு உயர்ந்திருக் கிறது. 2013-14ம் நிதி ஆண்டில் ரூ.1,501 கோடியாக இருந்த நிகர லாபம் இப்போது ரூ.1,579 கோடி யாக உள்ளது. மொத்த வருமானமும் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. 2013-14ம் நிதி ஆண்டில் ரூ.5,967 கோடியாக உள்ள மொத்த வருமானம் இப்போது ரூ.6,087 கோடியாக உயர்ந்திருக்கிறது.

ஒரு பங்குக்கு 1.80 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x