Published : 28 Apr 2015 10:06 AM
Last Updated : 28 Apr 2015 10:06 AM

இவரைத் தெரியுமா?- ரவி சங்கர் கைலாஸ்

மைத்ரா எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயல் இயக்குநர். 2010லிருந்து இந்தப் பொறுப்பை வகித்து வருகிறார்.

மைத்ரா எனர்ஜி நிறுவனத்தை லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிட்டார். இந்தியாவில் 6 மாநிலங்களில் இந்த நிறுவன செயல்பாட்டை விரிவுபடுத்தினார்.

தொலைத்தொடர்பு, ரியல் எஸ்டேட் மற்றும் சாப்ட்வேர் துறைகளில் தொழில்முனைவோராக 25 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர்.

ஸிப் குளொபல் நெட்வொர்க், சூயல் டெக்னாலஜீஸ், அல்டியுஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தொடங்க காரணமாக இருந்தவர்.

1988-ம் ஆண்டு வரை குடும்ப தொழிலை பார்த்துக் கொண்டிருந்தார். 1994 முதல் ஸிப் டெலிகாம் நிறுவனத்தில் கவனம் செலுத்த தொடங்கினார். இதன் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தார்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் டெலிகாம் இன்ஜீனியரிங் பட்டமும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மேற்படிப்பும் முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x