Published : 09 Feb 2015 10:31 AM
Last Updated : 09 Feb 2015 10:31 AM
மரபு சாரா எரிசக்தி முதலீட்டாளர் மாநாடு (ரீ-இன்வெஸ்ட்) இம்மாதம் 15-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. அந்நிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக இம்மாநாடு முதல் முறையாக நடத்தப்படுகிறது.
டெல்லியில் உள்ள அறிவியல் மையத்தில் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இந்த மாநாட்டை வெல்ஸ்பன் நிறுவனம் நடத்துகிறது. இந்த மாநாட்டுடன் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது.
மரபு சாரா எரிசக்தித் துறையில் அதிக முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதால் முதலீட் டாளர்கள், இத்துறை சார்ந்த பொருள்கள் தயாரிப்போர், மரபு சாரா மின்னுற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களிடையே ஒருங் கிணைப்பு பாலமாக இந்த மாநாடு அமையும் என்று புதுப்பிக்கத்தக்க மரபு சாரா எரிசக்தித்துறை செயலர் உபேந்திர திரிபாதி தெரிவித்துள்ளார்.
மரபு சாரா எரிசக்தித் துறையில் முழு வாய்ப்புகளையும் பயன் படுத்தும் மத்திய அரசின் இலக்கினை எட்ட இந்த மாநாடு உதவும் என்று நம்புவதாக வெல்ஸ்பன் நிறுவனத்தின் துணைத் தலைவர் விநீத் மிட்டல் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT