Published : 06 Jan 2015 11:36 AM
Last Updated : 06 Jan 2015 11:36 AM
கோல் இந்தியா நிறுவனத்தில் பங்கு விலக்கல் நடவடிக் கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்சங்கங்கள் இன்றுமுதல் 5 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால் மின் உற்பத்தி பாதிக்காத வண்ணம் தேவை யான நிலக்கரியை விநியோகம் செய்யுமாறு வலியுறுத்தபட்டுள்ளது. மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை விநியோகிக்க ரயில்வே முழுமையான உதவியை வழங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் மின் உற்பத்தியை பாதிக்காத வண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளையும் எடுக்க வேண் டும் என கேட்டுக்கொள்ளப்பட் டுள்ளது. நவம்பரில் நடந்த பேச்சு வார்த்தை முடிவுகள் எட்டப்படாத நிலையில் தொழிற் சங்கங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT