Published : 06 Jan 2015 01:04 PM
Last Updated : 06 Jan 2015 01:04 PM

ஷௌனா சவுகான் சலூஜா - இவரைத் தெரியுமா?

$ பார்லே அக்ரோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. இந்நிறுவனத்தை உருவாக்கிய பிரகாஷ் சவுகானின் மூத்த மகள்.

$ 2002-ம் ஆண்டிலிருந்து நிறுவன பொறுப்புகளைக் கவனித்து பள்ளி பருவத்திலிருந்தே தந்தையின் தொழிலுக்கு உதவி வந்ததால், இத்துறை பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்திருக்கிறார்.

$ ஸ்விட்சர்லாந்தின் லாசேனில் உள்ள சர்வதேச நிர்வாகவியல் கல்லூரியில் நிர்வாகப் படிப்பு படித்தவர். நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியவர்.

$ புரூட்டி, ஆப்பி, என்-ஜோய் உள்ளிட்ட குளிர்பானங்களை சர்வதேச சந்தைக்கு எடுத்துச் சென்றதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. பாட்டிலிலிருந்து டெட்ரா பாக்கெட்டுகளில் குளிர்பானத்தை முதலில் அறிமுகப்படுத்தியதும் இந்நிறுவனம்தான்.

$ ஆண்டுதோறும் ஜெர்மனியில் (டஸ்ஸல்டர்ப்) நடைபெறும் தொழில்நுட்பக் கண்காட்சியில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

$ தவறுகள் மூலமாக தான் அதிகம் கற்றதாகக் கூறுகிறார். எதையுமே உடனடியாகச் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x