Published : 06 Dec 2014 11:56 AM
Last Updated : 06 Dec 2014 11:56 AM

அருண் துகால் - இவரைத் தெரியுமா?

$ தரமதிப்பீட்டு நிறுவனம் இக்ரா-வின் தலைவராக வரும் ஜனவரி 29-ம் தேதி முதல் பொறுப்பேற்க இருக்கிறார்.

$ இதற்கு முன்பு ஸ்ரீராம் கேபிடல் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். கடந்த மாதம் இந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டார்.

$ 1967-ம் ஆண்டு ஐஐடி டெல்லியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்து சில நிறுவனங்களில் வேலை செய்து 1974-ம் ஆண்டு ஐஐஎம் அகமாதாபாத்தில் நிர்வாகபடிப்பு முடித்தார்.

$ அதன் பிறகு பேங்க் ஆப் அமெரிக்காவில் இணைந்தார். பிலிப்பைன்ஸ், ஹாங்காங், டோக்கியோ, சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றினார். 1998 முதல் 2001-ம் ஆண்டு வரை பேங்க் ஆப் அமெரிக்காவின் சி.இ.ஓ-வாக இருந்தார். 2001-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

$ 2001 ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றினார். இக்ரா உள்ளிட்ட பல நிறுவனங்களில் இயக்குநர் குழுவில் இருந்திருக்கிறார்.

$ ஐஐஎம் அகமாதாபாத்தில் வென்ச்சர் கேபிடல் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி குறித்து வகுப்புகளும் எடுத்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x