Published : 18 Dec 2014 11:05 AM
Last Updated : 18 Dec 2014 11:05 AM

தொடர் சரிவில் ரூபாய்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றும் சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 8 பைசா சரிந்து ஒரு டாலர் 63.61 ரூபாயில் முடிவடைந்தது. இந்திய பங்குச்சந்தையில் இருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது.

நேற்றைய வர்த்தகத்தின் இடையே ஒரு டாலர் 63.89 ரூபாய் வரை சரிந்தது. கடந்த வருடம் நவம்பர் மாதத்துக்கு பிறகு ரூபாய் மதிப்பு சரிவது இப்போதுதான். ரஷ்யா நாட்டு கரன்ஸியான ரூபிள் (Rouble) கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதம் வரை சரிந்தது. இதனால் டாலர் மதிப்பு உயர்ந்து மற்ற வளரும் நாடுகளின் கரன்ஸி மதிப்பு சரியத்தொடங்கியது.

இதற்கிடையே பொதுத்துறை வங்கிகள் டாலர்களை காலையில் விற்க ஆரம்பித்தன. ஆனால் இது பெரிய அளவில் இல்லை. பொதுத்துறை வங்கிகள் மூலமாக ரூபாய் சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி முயற்சித்தது என்றும் சொல்லப்படுகிறது.

முக்கிய நாடுகளுக்கு எதிரான டாலர் இண்டெக்ஸ் இப்போது 88.24 ஆக இருக்கிறது. பார்கிளேஸ், டாய்ஷ் வங்கி ஆகியவை குறுகிய காலத்தில் ரூபாயின் மதிப்பு 64யை தொட வாய்ப்பு இருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதற்கிடையே தொடர்ந்து ஐந்தாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x