Last Updated : 05 Dec, 2014 11:18 AM

 

Published : 05 Dec 2014 11:18 AM
Last Updated : 05 Dec 2014 11:18 AM

‘இந்தியாவின் வளர்ச்சி வரும் ஆண்டுகளில் சிறப்பாக இருக்கும்’

அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சியை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டும் நாடுகளில் இந்தியா இருக்கும். தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது இந்தியாவுக்கு சாதகமானது என்றும் அவர் தெரிவித்தார். இதனை பிரவுன் பல்கலைக்கழகம் நடத்திய விழா ஒன்றில் தெரிவித்தார். 2014-ம் ஆண்டு என்பது இந்தியாவுக்கு முக்கியமானது. 30-35 வருடங்களுக்கு பிறகு பெரும்பான்மை அரசு அமைந் திருக்கிறது. இந்த ஆண்டு இந்தியாவுக்கு அதிர்ஷ்டமானது என்றார்.

இப்போதைக்கு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 60 முதல் 70 டாலர் அளவுக்கு இருக்கிறது. இந்த நிலைமை அடுத்த இரண்டு வருடங்களுக்கு தொடரும் பட்சத்தில் அது நிச்சயம் இந்தியாவுக்கான பரிசுதான். மேலும் 2004ம் ஆண்டு 20 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை 2014-ம் ஆண்டு 140 டாலர் சென்றதை நினைவு கூர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x