Published : 04 Dec 2014 10:36 AM
Last Updated : 04 Dec 2014 10:36 AM

2015 டிசம்பரில் நிப்டி 9960 புள்ளியை தொடும்: மெக்கோரே

2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிப்டி 9960 புள்ளியை தொடும் என்று சர்வதேச ஆய்வு நிறுவனமான மெக்கோரே நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

நடப்பாண்டில் நிப்டி 36 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் சர்வதேச குறியீடான எம்.எஸ்.சி.ஐ. குறியீடு 4 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் நிப்டி மேலும் 16 உயர்ந்து 9960 புள்ளியை தொடும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் நிப்டி 8537 புள்ளியில் முடிவடைந்தது.

புதிய அரசின் ஸ்திரத்தன்மை, முதலீட்டாளர்களின் நம்பிக்கை, கச்சா எண்ணெய் விலை சரிவு, பேரியல் பொருளாதார குறியீடுகள் நம்பிக்கை அளிப்பது ஆகியவை பங்குச்சந்தைக்கு சாதகமாக இருக்கும்.

இதன் காரணமாக பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடரும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் நிப்டி 17400 முதல் 21500 புள்ளிகள் வரை கூட செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x