Published : 03 Dec 2014 10:37 AM
Last Updated : 03 Dec 2014 10:37 AM
$ டாய்ஷ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி. கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்
$ டெல்லி பல்கலைக்கழகத்தில் (ஹிந்து கல்லூரியில்) முதுகலைப்படிப்பு படித்தவர். வங்கித்துறையில் 28 வருட அனுபவம் பெற்றவர்.
$ 1991-ம் ஆண்டு டாய்ஷ் வங்கியின் வெல்த் மேனேஜ்மென்ட் பிரிவில் சேர்ந்தார். அதன் பிறகு கார்ப்பரேட் வங்கி பிரிவுக்கு 1993-ம் ஆண்டு மாறினார். 2003-ம் ஆண்டு அந்த பிரிவுக்கு பொறுப்பேற்றார். 2008-ம் ஆண்டு வரை இந்த பொறுப்பில் இருந்தார்.
$ தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படும் முன்பு கருவூலப்பிரிவு மற்றும் கேபிடல் மார்க்கெட் பிரிவுக்குத் தலைவராக இருந்தார்.
$ தற்போது பலர் தூங்குவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நேரம் இல்லை என்ற காரணத்தைச் சொல்லி தூங்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு மற்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். தூங்குவதற்கு கூட நேரம் இல்லை என்று சொல்வது நம்ப முடியவில்லை. என்னுடைய பல சீனியர்கள் அனைத்துக்கும் நேரம் ஒதுக்குவதை நான் பார்க்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT