Published : 01 Aug 2017 09:50 AM
Last Updated : 01 Aug 2017 09:50 AM
வாடிக்கையாளர்கள் விவரங்களைப் பதிவு செய்யும் கேஒய்சி விதிமுறைகளைச் சரிவர கடைபிடிக்காததால் யூனியன் வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கி ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது. யூனி யன் வங்கியில் சில கணக்குகளிலிருந்து பெரிய அளவில் பணம் எடுக்கப்பட்டு வருவது குறித்து புகார் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புகார் குறித்த ஆவணங்களை ஆர்பிஐ ஆராய்ந்தது, பிறகு யூனியன் வங்கிக்கு ‘ஏன் அபராதம் விதிக்கக் கூடாது?’ என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு வங்கி அனுப்பியிருந்த பதில்கள், வாய்மொழி வாக்கு மூலங்கள், கூடுதல் தகவல்கள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து அபராதம் விதிப்பது சரியே என்று முடி வெடுக்கப் பட்டதாக ஆர்பிஐ கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT