Published : 18 Aug 2017 10:39 AM
Last Updated : 18 Aug 2017 10:39 AM

`டை’ அமைப்பின்புதிய தலைவர் சங்கர்

தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் அமைப்பான `டை சென்னையின்’ புதிய தலைவராக கேம்ஸ் நிறுவனத்தை நிறுவிய வி.சங்கர் பொறுப்பேற்றுக்கொண்டார். தலைவராக இருந்த ஆர்.நாராயணனின் இரண்டு ஆண்டு பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவராக சங்கர் பொறுப்பேற்றார். 2019 வரை பொறுப்பில் இருப்பார்.

இது தொடர்பாக அவர் பேசும் கூறும்போது, தொழில்முனைவோர்கள் நிதி திரட்டுவதில் சிரமங்களை சந்திக்கின்றனர். தொழிலுக்கான திட்டத்தை உருவாக்குவது, முதலீட்டு நிறுவனங்களை அணுகுவது உள்ளிட்டவற்றை தொழில்முனைவோர்களுக்கு கற்றுதர இருக்கிறோம். இந்த ஆண்டுக்கான டைகான் நிகழ்ச்சி நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் சங்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x