Published : 06 Jun 2016 11:00 AM
Last Updated : 06 Jun 2016 11:00 AM
தவறான வடிவமைப்பு, பாதுகாப்பு விதிகளை மீறும் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ. 100 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.
புதிய சாலை பாதுகாப்பு மசோ தாவின்படி விதிகளை மீறும் தனி நபருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகனங்களில் தாங்களாகவே விதிகளை மீறிய உதிரி பாகங்களை பொறுத்தினால் இத்தகைய அபராதம் விதிக்கப் படும். குறிப்பாக அதிக ஒளி உமி ழும் விளக்குகள், காதைக் கிழிக் கும் ஹாரன்கள், அதிக லோடு ஏற்ற வசதியாக மேல் பகுதியில் கூடுதல் பாகங்களை பொறுத்துவது உள் ளிட்டவை அபராதத்துக்குரிய குற்றங்களாகும்.
இதுபோன்ற தயாரிப்புகளை விற்பனை செய்யும் டீலர்கள், இதை அமைத்துத் தரும் கட்ட மைப்பு நிறுனங்கள் மீது ஒரு வாகனத்துக்கு ரூ. 1 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்படும். அதே போல விதிகளை மீறிய உதிரி பாகங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
மத்திய அரசு அமைத்த சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து ஆய்வு செய்ய மாநில போக்குவரத்து அமைச்சர்கள் அடங்கிய குழு அளித்த பரிந்துரைகளில் இவை இடம்பெற்றுள்ளன.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பழுது பட்ட வாகனங்களைத் திரும்பப் பெற்று சரி செய்யாவிடில் ரூ. 100 கோடி வரை அபராதம் விதிக்க லாம் என குழு பரிந்துரை செய் துள்ளது. ராஜஸ்தான் மாநில போக்குவரத்து அமைச்சர் யூனுஸ் கான் தலைமையிலான குழு இத்தகைய பரிந்துரைகளை அளித்துள்ளது. இக்குழுவின இறுதிக்கட்ட பரிந்துரைகள் இம்மாதம் வெளியாகும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT