Published : 04 Sep 2016 11:30 AM
Last Updated : 04 Sep 2016 11:30 AM
முதலீட்டாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி பணத்தை திருப்பி அளித்தது எப்படி? சஹாரா நிறுவனத்திடம் உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள சஹாரா குழுமம், பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்து வைத்திருந்த கடன் பத்திரங்கள் மூலமாக பணம் திரட்டப்பட்டது என்று கூறியுள்ளது. மேலும் முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டி இருந்ததால் சஹாரா குழும நிறுவனங்கள் மூலம் பணம் திரட்டப்பட்டது.
இது தொடர்பாக சஹாரா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சஹாரா நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 5,000 கிளைகள் உள்ளன. அனைத்து வகையான பரிமாற்றங்களும் இந்த கிளைகள் மூலமாகத்தான் நடக்கின் றன. சஹாரா நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் கிளைகள் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிப்பதற்கு எளிதாக பணம் திரட்ட முடியும். முதலீட்டாளர் களுக்கு பணம் திருப்பி அளிக்கப் பட்டது தொடர்பான ஆவணங்கள் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சஹாரா நிறுவனத்தில் முதலீடு செய்தவர் களில் பெரும்பாலானவர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. நேரடி யாக பணத்தின் மூலமாகவே முதலீடு செய்திருந்தனர்.அதனால் அவர்களுக்கு வங்கி மூலமாக இல்லாமல் நேரடியாக பணமாகவே திருப்பி அளிக்கப்பட்டது. இவ்வாறு சஹாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டது தொடர்பான அனைத்து ஆவணங்களும் `செபி’-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று சஹாரா குழுமத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT